Friday, April 25, 2008

கனவுக் கோட்டை

நீ சிந்தித்துக்கொள்ளும் பொழுதுகள்
எல்லாம் சுருங்கிவிட்டன
இன்னும் சிறிது நேரத்தில் - நீ
சிந்திப்பதையே நிறுத்திவிடுவாய்
அதன்பின்
உன் சிந்தனை வெளிகள்
எரிந்த
ரோமைப்போல்
சாம்பல் மேடாகவே -
காட்சியளிக்கும்.
எப்படித்தான் எரிந்தாலும்,
நீரோவைப் போல
நீயும்
பிடிலைத்தான் பிடித்திருப்பாய்.
அங்கு - உன் சிந்தனைகள்
சுருங்கிச் சூக்குமம் ஆகிவிடுவதால்
கனவுக் கோட்டைகளை
கட்டியழுதபடி
மீதிக்காலத்தை கழித்துவிட்டு -
கடைசியில்
விழித்துக்கொள்வாய்.
அப்போது
காலம் மிகக் கடந்திருக்கும்.....

7 பின்னூட்டங்கள்:

மதுவர்மன் said...

வாருங்கோ சுதா!

தமிழ் பூங்காவில், உங்கள் கையும்பட்டு புதுப்புது பூக்கள் மணம் வீசட்டும்.

கவிதை நன்றாக இருக்கின்றது.

எழுதுங்கள்.

அபிமன்யு said...

அருமையான ஆரம்பம்.......
தொடர்ந்து எழுதுங்கள்.......

எவனோ ஒருவன் said...

வாங்கோ சுதா
நல்லதொரு ஆரம்பம் தொடர்ந்து எழுதுங்கள்

கவிதை சூப்பர்..........

சண்சுதா said...

நன்றி நன்பர்களே.. நீங்கள் தரும் உற்சாகத்துக்கு நன்றி... தொடர்ந்து எழுதுவேன்.

மதுவர்மன் said...

சுதா,

இக்கால நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் (முக்கியமாக தொலைக்காட்சி) , இயந்திரத்தனமாக வேலைகளில் செலவளிந்த நேரம்போக, மிச்சசொச்ச நேரத்தையும் தின்றுதீர்த்துவிடுவதால், நாங்கள் சித்திப்பதே இல்லைதான்.

நாங்கல் சிந்திக்காவிட்டால் தானே, அவற்றுக்கும் எங்கள் பொன்னான நேரங்களையெல்லாம் தின்றுர்தீர்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.

சிந்தித்தால் தானே பிரச்சினை!(?)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நவீன காலச் சாதனங்களால் உலகம் கிராமமாகச் சுருங்கிவிட்டதென்னவோ உண்மைதான். ஆனால் பக்கவிளைவாக எங்கள் சிந்தனைகளையும் சுருங்கச் செய்து விட்டது.

பூங்காவில் இன்னொரு அருமையான கவிதைப் பூ.

சண்சுதா said...

உலகம் கிராமமாக சுருங்குதல் ஆறுதலான விசயம் இல்லை.... ஊடகங்கள் என்றும் பொறுப்புடன் செயற்படப்போவதில்லை... மக்கள் கிளிகளல்ல, பழங்களை மட்டும் தெரிந்து தின்பதற்கு, காகங்கள், எது கிடைக்கிறதோ அதயே நுகர்வார்கள்.. சரியானதை கொடுக்கவேண்டியது ஊடகங்களின் கடமை... அல்லது மக்களை விழிக்க வைக்க வேண்டியது மக்கள் நலத்தில் ஆர்வமுள்ளவர்களின் கடமை. செய்வம்.. செய்வம்...

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி