Friday, February 29, 2008

சுஜாதா...என்றும் தமிழோடு.

இருக்கும்வரை அருமை தெரிவதில்லை இறந்தவுடன்தான் இழப்பை உணர்கின்றோம். அல்லது இருக்கும்போது அருமை பெருமைகளைப் பேசி புகழ்மாலை சூட்டும் வழமை தமிழனிடம் இல்லை. உண்மையில் சுஜாதா, வாழ்நாட்சாதனையாளன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு எழுத்தாளன்.

தனது கடைசிக் காலம்வரை எழுதிக்கொணடேயிருந்த ஒரு வெற்றி எழுத்தாளன். எனக்குத் தெரிந்தவரை இன்றுவரை தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகளுக்காக ஒரு எழுத்தாளன் சஜாதாவேதான். அவரது என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ என்னும் நாவல்கள் ஒரு சிறிய இயந்திர நாய்க்குட்டிக்கு மனிதர்கள்போல உணர்ச்சிகள் வருவதுபற்றிய ஒரு அருமையான விஞ்ஞானப் புனைகதை (Science Fiction) கள். இது ஒரு உதாரணமே. அவரது ஒவ்வொரு படைப்புக்களும் தனித்துநின்று வாழக்கூடியவை.

இங்கே ஆனந்தவிகடனில் மிகவும் வெற்றிபெற்ற தொடராக வந்த அவரது கற்றதும் பெற்றதும் இனைப் பற்றிக் கூறியாகவேண்டும். கற்றதும் பெற்றதும் தமிழுக்குப் புதிது. அது கட்டுரையல்ல, கவிதையல்ல, விமர்சனமுமல்ல. அது ஒரு புதுமாதிரியான ஒரு எழுத்துநடை. வாசித்து மட்டுமே அனுபவிக்கக்கூடிய படைப்பு.

அவர் தனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் குறிப்பிட்ட வகைகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டவரல்லர். விஞ்ஞானம், வாழ்க்கை, ஆன்மீகம் (அவரது சில ஆன்மீக்க கட்டுரைகளுடன் எனக்கு உடன்பாடில்லை), தமிழிலக்கண இலக்கியம், கவிதை, விமர்சனம் மற்றும் சினிமா என எல்லாத்துறைப் படைப்புக்களிலும் வெற்றியீட்டிய ஒரு படைப்பாளி.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தங்கள் மற்றும் மொழி ஆராச்சிகளில் சிறந்த முடிவுகளையும் விமர்சனங்களையும் தந்தவர்.

மொத்தத்தில் எழுத்துத்துறைக்கும் தமிழுக்கும் அவரது மறைவு (27. 02 2007 அன்று) ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பு.

தமிழ்ப்பூங்கா சார்பாக எமது அஞ்சலிகளை அவருக்குக் காணிக்கையாக்குகிறோம்.
____________________________________________________

சுஜாதா எங்கோவொருமுறை எழுதியது: தமிழ்ப் புணர்ச்சி விதிகளில் எனக்கு இன்னமும் புரியாதவொன்று,

தங்கம் + காசு = தங்கக்காசு (திரிதல் விகாரம்)

சங்கம் + காலம் = சங்ககாலம் (கெடுதல் விகாரம்)

சங்கக்காலம் எனப்படவேண்டியது ஏதோவொரு காரணத்தால் சங்ககாலம் எனப்படுகிறது
____________________________________________________

சுஜாதாவின் 'கடவுள்' கட்டுரை தொகுப்பிலிருந்து,

மனிதனைப்
பொறுத்தவரை உயிர் என்பது உடல் இயக்கமா ? அவன் நினைவுகளா ?........
உயிர்
என்பது என்ன அன்று ஆதாரமாக சிந்திக்கும் பொழுது, நம் ஞாபகங்கள் தான் உயிர்...



Wednesday, February 27, 2008

உள்ளொன்று வைத்துப் புறமொன்று...

பழமொழி: "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

வெளிப்படை விளக்கம் : உணவு சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு உடனடியாக செல்; சண்டை சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு போவதை குறை.

உண்மை விளக்கம் : எப்பொழுதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கு.

உண்மை விளக்க விளக்கம் : எமது பண்டைய வரலாறுகளில் ஒரு பந்திக்கு முதலில் அழைப்பது கல்வி கலைகளில் சிறந்து விளங்கிய ஒருவரையே அத்துடன் ஒரு படைக்கு பின்னால் தலைவனாக நின்று அதை வழிநடத்தி செல்வதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கும் ஒருவரே.

Monday, February 25, 2008

அவள் ஒரு கொலையாளி....

ஆயுதம் இல்லாமல் என்னை கொல்கின்றாள்
என்னைப்பார்த்து சிரிக்கும் போது

Wednesday, February 20, 2008

அவளுக்காக.....

கவிதை எழுத தெரியுமா எனக்கேட்டாள்
எழுத தெரியும் என்று பொய் சொன்னேன்
அவள் பெயரை எழுதி கவிதை என்றேன்
பல சினிமாவில் பார்த்துவிட்டேன் என்றாள்
பின்னால் என் பெயரையும் சேர்த்துக்கொண்டேன்
அருமையான ஹைகூ என்றாள்
அன்று தான் தெரியும் ஹைகூ இரண்டு வரி என்று

Wednesday, February 13, 2008

நாளை காதலர் தினம்!!!


நண்பன்: காதலைப் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: அனுபவம் போதாதடா. இதுவரை நான் காதலித்தது இருபது பெண்களைத்தானடா.

நண்பன்: காதலர் தினம் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: வழமையான வருடங்களில் நாற்பத்தாறு நாட்கழித்தும்; நான்கு வருடங்களுக்கொருமுறை நாற்பத்தேழு நாட்கழித்தும் வந்திருக்க வேண்டியது...

எல்லாப் பூக்களுக்காக...ஒரு பூங்கா

நான் ஒரு பராமரிப்பாளன். தமிழ்ப்பூங்கா உரிமையாளரால், பறந்து வரும் வண்டுகள் இளைப்பாறித் தேனுண்டு களிக்க ஓரிரண்டு பூச்செடிகள் நட்டு பூவரும்வரை அதைப் பராமரிக்க அழைக்கப்பட்ட ஒருவன்.

என்போல் சிலபல பராமரிப்பாளர்கள் இப்பூங்காவில...ஆனால் ஏன் எல்லோரும் ஒரே பூச்செடியை நட்டு ஒரே பூக்களையே தரவேண்டும்? வரும் வண்டுகள் சலிப்படையுமல்லவா...சலிப்படையும் வண்டுகள் மீளவர மறுக்குமல்லவா...

வண்டுகள் வகை பல. நான் இந்தப் பூவில் மட்டும்தான் தேனுண்பேன் என்றியம்பும் வகை சில; எல்லாப் பூக்களிலும் நானமர்வேன் என்றியம்பும் வகை சில.

நான் இனி நடப்போகும் செடிகள் ஒருவகைக்குள் மட்டும் ஒதுங்கிக் கிடக்காது. ஒற்றைச் செடியிலும் இனி வண்டுகள் வந்தமர வகைவகையாயப் பூவிருக்கும். உரிமையாளரைக் கேட்காது உரத்தைப் போடப்போகிறேன்; உங்களது தயவோடு செடியை ஊன்றப்போகிறேன்.

Sunday, February 10, 2008

சுதந்திர தினம்

சில வீதிகள் போக்குவரவுக்குத் தடை
பல இடங்களில் வழமைக்கதிகமான சோதனைகள்
வெளியே போனால் திரும்புவோமா மீண்டும்....?
வேறென்ன இன்று "சுதந்திர தினம்"