Wednesday, April 30, 2008

சாதி

இவன் காதிலும் விழுந்திருக்குமோ ?
ஈனப்பிறவிகள்-
காலாவதியான கட்டுப்பாடுகள்,
தொலைந்துபோன சம்பிரதாயங்கள்,
சில கற்பனைக் கோடுகள்-
இவற்றைப் பிடித்துக்கொண்டு,
படி தாண்டாத
அல்லதுதாண்டவிரும்பாத’வீரர்கள்’-
குரங்காயிருந்தபோது உறைக்காதவைகள்-
அப்படியே இருந்திருக்கலாம்.
நண்பனின் இலையில்
சோற்றை எறிந்துவிட்டு
குசினிக்குளிருந்து
குசுகுசுத்த வார்த்தைகள்-
‘என்ன எளிய சாதியோ தெரியாது’
இவன் காதிலும் விழுந்திருக்குமோ ?

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி