Thursday, April 24, 2008

இதுவும் காதல் தான்....

அவளை முதலில் பார்த்தபோது பரவசமடைந்தேன்....
ஆனால் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை....

அவள் அழகானவள் உண்மை....
ஆனால் தேவதை என்னும் அளவுக்கு இல்லை....

அவள் அருகில் இல்லாதபோது தவித்தேன்....
ஆனால் நிமிடங்கள் வருடங்களாகுவதில்லை....

அவள் பிரிந்தபோது தவித்தேன்....
ஆனால் உயிர் நீக்க துணியவில்லை....

நம்பினால் நம்புங்கள்.... என் காதல் உண்மையானது....
புனிதமானது....

4 பின்னூட்டங்கள்:

எவனோ ஒருவன் said...

அருமை அபிமன்யு

இது தான் உண்மையான காதல்,
யதார்த்தமான காதல்.
முதல் வரிகள் யாதர்த்த காதல்
இரண்டாம் வரிகள் சினிமா காதல்.

தொடர்ந்து கலக்குங்க.......

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஆய்த எழுத்தில வைரமுத்து உண்மை சொன்னால் நேசிப்பாயா என உண்மைக்காதலை சொல்லுவதுபோல் அபிமன்யு நீங்களும் சும்மா கலக்கியிருக்கிறீங்க போங்க.

Anonymous said...

simply super

one of a best poem that i have read

அபிமன்யு said...

நன்றிகள்
ஏதோ என் மனதில் பட்டதை சொன்னேன்
இப்போது தான் புரிகிறது நிறையப்பேர் உண்மைக்காதலை உணர்ந்திருக்கிறார்கள் என்று......

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி