Sunday, May 11, 2008

வாயினால்... பிறந்தன குழந்தைகள்!

கொஞ்சம் பொறுங்கோ! தலைப்பை பார்த்திட்டு ஓடி வந்திருப்பியள்... கொஞ்சம் ஆசுவாசபடுத்திக்கொள்ளுங்கோ.

தலைகீழா நிண்டாலும் வாயாலை குழந்தை பிறக்குமே...? சிலவேளை தலைகீழா நிண்டால் வாயாலை பிறக்கும் தானே எண்டு நீங்கள் நினைப்பியள். அது பிழை. தலைகீழா நிண்டாலென்ன தலைமேலா நிண்டாலென்ன குழந்தை வழமையா பிறக்கிறமாதிரி தானே பிறக்கும். ஒண்டில் இயற்கையா பிறக்கவேணும் இல்லாட்டி, சத்திரசிகிச்சை செய்து எடுக்கவேணும்.

தலைப்பை கொஞ்சம் மாத்தவேணும். சுருக்கமா போடுறதுக்காக அப்பிடி போட்டுட்டன். தலைப்பு எப்பிடி வரவேணுமெண்டால்..

“வாயினால் குடித்ததால் பிறந்தன குழந்தைகள்” எண்டு வரவேணும். அதுவும் 'வாயினால் பாயாசம் குடித்ததனால், பிறந்தன குழந்தைகள்'.

இப்ப உங்களுக்கு கொஞ்சம் விளங்குமெண்டு நினைக்கிறன். தலைப்பை “பாயாசத்துக்கு பிறந்ததுகள்...” எண்டு போடுவமோ எண்டும் நினைச்சன். பிறகு ஆகக் கேவலமாய் போடும். பரவாயில்லை, தொடர்ந்து வாசியுங்கோ.

எங்கையெண்டு தெரியுமே? வேறையெங்கை... இந்தியாவிலைதான்...

எனக்கு இது என்னண்டு தெரியுமெண்டு கேட்பியள்... வேறை என்னண்டு, எங்கடை, இலங்கையின்ரை நம்பர் வண் சக்தி ரீவீயிலை தான் காட்டினவங்கள். அதுவும் 2008-05-11 ஞாயிற்றுக்கிழமை.

தசரதன் எண்டவர் தான் அப்பாவாம்.. அவருக்கு மூண்டு மனிசிமாராம்... அவையின்ரை பேரும் எனக்கு ஞாபகம் வருகுதில்லை. ஆ.. ஒராள் கோசலை.. மற்றாள் கைகேயி... மற்றாள் சுமித்திரை.

அப்ப, வழமை மாதிரி.. தசரதனும், மூண்டு மனிசிமாரும் சந்தோசமா வாழ்ந்து வந்தினமாம்.. ஆனால் பாருங்கோ.. தசரதனுக்கு நீண்டகாலமா ஒரே கவலையாம்.. அதென்னண்டால்.. அவையளுக்கு கனகாலமா பிள்ளையளில்லையாம்.... மற்றாக்கள் தங்கடை பிள்ளையளோடை கொஞ்சிக்குலவுறதை பார்த்து தசரதனுக்கு ஒரே ஏக்கமாம்..

அப்ப இப்பிடி இருந்துவரும் காலத்திலே.. ஒருநாள் யாரோ ஊரிலை பெரியாக்கள் தசரதனுக்கு ஆலோசனை சொல்லிச்சினமாம், யாகமொண்டு செய்தால் உனக்கு குழந்தை பிறக்கும் எண்டு. இவ்வளவு நாளும் குழந்தை பெற்றுக்கொள்ளுறதுக்கு வழி தெரியாமலிருந்த தசரதனுக்கு சொல்லவா வேணும்.. சந்தோசத்தாலை துள்ளிக்குதிச்சாராம்...

தசரதன், உடனை போய்.. யாகம் செய்தாராம்.. யாகம் எண்டால் என்னெண்டு உங்களுக்கு தெரியும் தானே? உந்த எங்கடை சைவக்கோயில்களிலை செய்வாங்கள்.. நடுவிலை நெருப்பெரிச்சு, கண்டது கடியது எல்லாத்தையும் அதுக்குள்ளை ஊத்தி, ஏதோவெல்லாம் விளங்காத பாஷையிலை சொல்லுவாங்கள்.. அதேதான்.. விளங்குதுதானே...!

அப்ப தசரதன் யாகம் செய்துகொண்டிருக்கேக்கை.. அந்த நெருப்பிலை ஆரோ ஒராள் தோன்றி ஒரு கிண்ணத்திலை பாயாசத்தை தசரதன்ரை கையிலை குடுத்திட்டு மறைஞ்சிட்டாராம்... சொக்கிப்போன தசரதன்.. பாயாசம் ஆறமுதல்.. ஓடிப்போய்.. மூண்டு மனிசிமாருக்கும் குடிக்கக் குடுத்தாராம்...

அவை குடிச்ச வடிவை பார்த்தியள் எண்டால்... நான் பார்த்தனான்.. அப்ப... மூண்டு மனிசிமாரிலை.. ஒராள் கொஞ்சம் கூடக்குடிச்சிட்டாவாம்.. மூண்டாவது மனிசி தான் அவ.. சுமித்திரை...

அப்ப, பாயாசம் குடிச்சது மட்டும் தான்.. வேறை ஒண்டுமே தசரதனுக்கும்.. அவற்றை மூண்டு மனிசிமாருக்கும் இடையிலை நடக்கேலை... ஆனாலும், பாயாசம் குடிச்சதாலை.. மூண்டு மனிசிமாரும் கர்ப்பமாகிட்டினமாம்..

உண்மையாய் தான் சொல்லுறன்.. அவை வேறை ஒண்டுமே செய்யேல்லை... தசரதன் குடுத்த பாயாசத்தை குடிச்சது மட்டும் தான்... என்ன இழவு பாயாசமோ அது தெரியாது.. !(?)

அப்ப, கொஞ்ச காலத்துக்கு பிறகு.. மூண்டு மனிசிமாருக்கும் பிள்ளைகள் பிறந்திச்சுதாம்.. அதிலையும் பாருங்கோ.. நான் முதலிலை சொன்னன்.. ஒராள் கொஞ்சம் கூட பாயாசம் குடிச்சா எண்டு.. சுமித்திரை.. அவவுக்கு இரண்டு பிள்ளைகளாம்.... அப்ப, இப்ப உங்களுக்கு விளங்குது தானே பாயாசம் குடிச்சதாலை தான் பிள்ளையள் பிறந்தது எண்டு.

கோசலைக்கு ஒண்டு, கைகேயிக்கு ஒண்டு, சுமித்திரைக்கு இரண்டு எண்டு மொத்தம் நாலு பிள்ளையள், தசரதனுக்கு. தசரதனுக்கு சந்தோசம் தங்கமுடியேல்லை.. மேலையும் கீழையும் எண்டு குதிச்சாராம்.. பிள்ளையளுக்கு முறையே இராமன், பரதன், இலட்சுமணன், சத்துருக்கன் எண்டு பேர் வச்சினமாம்.

பாத்தீங்களோ நடந்ததை.... பிள்ளை பெறத்தெரியாமல் இருந்த தசரதனுக்கு இப்ப ஒரேயடியா நாலு பிள்ளையள்.. அதுவும் அவராலை பிறக்கேல்லை.. அவர் ஒண்டுமே செய்யேல்லை.. மூண்டுபேரையும் தொடவேயில்லையாம்... சும்மா ஒரு யாகம் செய்தார்.. சுடச்சுட பாயாசம் கிடைச்சிது.. அதை மனிசிமாருக்கு குடுத்தார் அவ்வளவுதான்...

அப்ப இதை பார்த்த எனக்கு பெரிய அதிசயமா இருந்திச்சு. எங்கடை சமூகத்திலையும் பாருங்கோ.. எத்தினையோ பேர் இன்னும் பிள்ளையள் பெறாமல் இருக்கினம். அவைக்கும் தசரதன் மாதிரி எப்பிடி பிள்ளை பெறுறது எண்டு தெரியாமல் தான் இருப்பினம் எண்டு நான் நினைக்கிறன்.. நீங்கள் என்ன நினைக்கிறியள்..?

அப்ப, தசரதன் இந்தியாவிலை இப்பிடி வலு ஈஸியா பிள்ளை பெத்திருக்கேக்கை, இதை அவரைமாதிரியே பிள்ளையள் இல்லாம வாடுற ஆக்களுக்கு தெரியப்படுத்தவேணும் எண்டு தான் இதை இப்பிடி ஆராஞ்சு எழுதுறன்... பாயாசம் மட்டும் போதுமுங்கோ.... ஆனால் யாகம் செய்யவேணும்...

அப்ப செய்யவேண்டியது ஒண்டு தான்.. தசரதனை மாதிரி யாகம் செய்யுங்கோ.... சுடச்சுட பாயாசம் கிடைக்கும்.... தசரதனுக்கு மூண்டு மனிசிமாரெண்டதாலை.. கொஞ்சம் கூட பாயாசம் கிடைச்சிருக்கும்.. உங்களுக்கு ஒரு மனிசியெண்டால்.. கொஞ்சம் குறைவாய் தான் கிடைக்கும்.... பரவாயில்லை... சூடாறுறதுக்கு முதல் மனிசிக்கு குடிக்க குடுங்கோ.... அல்லது மனிசிமார் இதை வாசிச்சா, சூடாற முதல் குடியுங்கோ...

ஒண்டு.. கனக்க பாயாசம் கிடைச்சாலும்.. அளவாய் குடியுங்கோ.. தெரியும் தானே! சுமித்திரை கொஞ்சம் கூட குடிச்சு இரண்டு பிள்ளையள் பிறந்தது... ஆகக் கனக்க குடிச்சியள் எண்டால், பிறகு கனக்க பிள்ளையள் பிறந்திடுங்கள், கவனம்.

சரி, பகுத்தறிவுவாதியள் எண்டு சொல்லுறாக்கள், நினைப்பீங்கள்.. என்ன வயித்துக்குள்ளையோ (இரைப்பை) பிள்ளை உருவாகுதெண்டு.. அதெல்லாம் ஆருக்கப்பச்சி தெரியும்? இரைப்பையிலை உருவானா என்ன, கருபையிலை உருவானா என்ன.. எங்களுக்கு குழந்தை கிடைச்சா சரி.. உந்த விஞ்ஞானம், பகுத்தறிவு எண்டு சொல்லுறாக்கள் கண்டதையும் சொல்லுவினம்.. உடலுறவு, கருப்பை அது இதெண்டு... உதெல்லாம்.. சும்ம்மா.... பொய்.. தேவையில்லாதது... பாயாசம் மட்டும் இருந்தா போதும்

அதுக்கென்ன... அவை சொல்லுறதுகளையும் சரியெண்டு எடுத்தால்.. இரைப்பையும் கருப்பைக்கு பக்கத்திலை தானை இருக்கு.. எல்லாம் வயித்துக்குள்ளை தானே இருக்கு. எல்லாம் ஒண்டுதான்.. அப்ப பாயாசமெண்டு....? இதுவும் அதுதான்... அங்கை(?)யிருக்கிறது.. இங்கை கிண்ணத்திலை இருக்கு... சுடச்சுட.... அவ்வளவுதான்...

- மதுவர்மன் mathuvarman (2008-05-11)-

12 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் said...

ஈழத்தமிழில் இராமாயணம் ! படிக்கத்தான் எத்தனை சுவை !!!.

நன்றாக இருந்த்து !

எவனோ ஒருவன் said...

அருமை,

வழமையான உங்கள் எழுத்து நடையில் இருந்து மாறுபட்டதும் வித்தியாசமாக உள்ளது

மதுவர்மன் said...

நன்றி கோவி.கண்ணன்,

இராமாயணத்தின் தொடக்கமே பிழை என்பதை காட்டவேண்டும் என்று நினைத்தேன். இங்கே இலங்கை தொலைக்காட்டியொன்றில் ஒலிபரப்பான இராமாயண தொடரின் முதல் பாகத்தை பார்த்தவுடனேயே எழுந்த எண்ணத்தில் எழுதினேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் எழுத்துக்களையும் வாசிப்பவன் நான்.

மதுவர்மன் said...

நன்றி எவனோ ஒருவன்,

இராமாயண தொலைக்காட்சித்தொடரின் முதல் பாகத்தை பார்த்தவுடன் என் மனதில் பட்டதை எழுதினேன், அதுக்கு இந்த மாதிரி மொழிநடை இயல்பாகவே வந்தது.. எழுதினேன்..

அடுத்தடுத்த வாரங்களில், மிகுதி பாகங்களையும் பார்க்கமுடிந்தால் அவை பற்றியும் எழுத முயற்சிக்கின்றேன்...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சின்ன வயசில இதுகளைப் பாத்து உண்மையெண்டு நம்பி...சின்னப்பிள்ளைகளின்ர மனசில எத்தனை தவறான விளக்கங்களை நாமும் இந்த ஊடகங்களும் சமயங்களும் விதைத்துக்கொண்டிருக்கின்றன.

எனினும் வர வர மூடநம்பிக்கைகள் குறைந்து வருவது நம்பிக்கையூட்டுகின்றது.

Unknown said...

//அங்கை(?)யிருக்கிறது.. இங்கை கிண்ணத்திலை இருக்கு... சுடச்சுட.... அவ்வளவுதான்...//

:))))))))))

சண்சுதா said...

புராணங்களில் நாசூக்காக சொல்லப்பட்டிருக்கும் கள்ளக்காதல்கள்.



மதுவர்மன் தன்னுடய பதிவில் சொல்லியிருக்கும் இராமயண சம்பவத்தைவிடவும் ஏனய புராண இதிகாசங்களில் அதிகப்படியான கள்ளக்காதல்களை நாசூக்காக சொல்லியிருக்கிறார்கள்.

மகா பாரதத்தில்...

தன் இரு மனைவிகளையும் கர்ப்பமாக்க முடியாமல் தவித்த பான்டுவுக்கு தர்மதேவதை(?)(எமன் என்டும் கேள்வி)முதலான ஐந்து தேவர்கள் சந்தான பாக்கியம் அருளிச்"செய்தனர்". மேலும் பாண்டுவின் மூத்த மனிசி குந்திக்கு கலியாணத்துக்கு முந்தியே சூரியதேவன் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரது எங்கோ (நுதல் என்று நினைவு) இருந்து வெள்ளொளி கிளம்பி குந்தியின் அடிவயிற்றுக்குள் பாய்ந்ததாகவும் அதில் பிறந்த பிள்ளை ஆற்றோடு விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இராமயணத்தில்...

தசரதனுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிமாராம்..அவர்களுடனேயே மினக்கட நேரமில்லாத தசரதன், பட்டமகிசிகளை எங்கே கவனிப்பது அவர்களும் எங்கே கர்ப்பமாவது? அல்லது, கர்ப்பமாக்ககூடிய தகுதி இல்லாத மன்னனின் மனிசிமார் யாரிடமோ போய் கர்ப்பமாகிவிட, அதை மறைக்கத்தான் புத்திர காமேஸ்டி யாகமும் பாயாச கதையுமோ தெரியாது...

nedun said...

//வாயாலை குழந்தை பிறக்குமே//

மகா பாரதத்தில் சூரிய பகவான் மூலம் குந்தி தேவியின் வாயில் பிறந்தவன் தான் கர்ணன். ஏன் வாய் வழியாக பிறந்தான் என்று ஆராயக் கூடாது

மதுவர்மன் said...

மதுவதனன் நீங்கள் சொல்வது சரி.

வர வர மூடநம்பிக்கைகள் குறைந்துகொண்டுதான் வருகின்றன.

மேற்குலகத்தில் இந்த மாற்றம் மிகவேகமாக நடந்திருக்கின்றது.

நாங்கள் இன்னும் நிறைய பிந்தங்கியுள்ளோம். மூடநம்பிக்கைகள் தன்பாட்டிலேயே குறைந்துபோய்விடவில்லை.

இந்த மாற்றத்துக்கு பின்னால் எத்தனையோ மனிதர்களின் உழைப்புக்கள் இருக்கின்றன.

தந்தை பெரியார், கார்ல் மாக்ஸ், இன்னும் எத்தனையோ விஞ்ஞானிகள் என்று.

ஆகவே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது. அதற்கு பலர் இந்த சமூகத்தில் உழைக்கவேண்டியுள்ளது.

ஏனென்றால், மக்களை இன்னும் இன்னும் பிற்போக்குத்தனங்களுக்குள்ளே தள்ள பல ஊடகங்களும், மத அமைப்புக்களும், முயன்றுகொண்டுதானிருக்கின்றன.

மதங்களின் பிடி, விஞ்ஞான வளர்ச்சியின் முன்னால் தளர்த்துகொண்டே போகின்றது என்பது நிதர்சனமான உணமை.

மேற்படி தொலைக்காட்சியிலே ஒளிபரப்பட்டட்ட இராமாயணம் தொடர் கூட, நவீன சினிமா உத்திகளை பாவித்து எடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த, இக்காலத்துக்கு பெருமளவிலும் ஒவ்வாத, சமூக வக்கிரங்கள் நிறைந்த, மத ஆக்கிரமிப்பின் வடிவமான கற்பனைக்கதைகளை, மெய்யென நம்பி பிழைப்பு நடத்துபவர்களும், அக்கதாசிரியர்களை கடவுளராக்கி மக்களை ஏய்ப்பவர்களும் புதிய புதிய வழிமுறைகளில் மக்களை மூடத்தனங்களுக்குள்ளே இழுக்க முயற்சித்துக்கொண்டுதானிருக்கின்றார்கள்.

மதுவர்மன் said...

உமையணன்,

பின்னை, என்னத்தை தான் சொல்லுறது? நீங்கள் சொல்லுங்கோ!

மதுவர்மன் said...

சரியாகச் சொன்னீர்கள் சுதா!

அஸ்வமேத யாகம் கூட பிராமணர்கள்(புரோகிதர்கள்) அரசர்களை ஏமாற்றி அரசியின் மனைவியுடன் உடலுறவு கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டதே.

இங்கே சென்று பாருங்கள்
http://osaichella.blogspot.com/2007/03/horse-sacrifice.html

பாலியல் வக்கிரங்கள் நிறைந்தது தானே இந்து மதம்.

எல்லாவற்றுக்கும் முதலில், இந்த இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் கற்பனைக்கதைகள் என்பது வெளிப்படை.

கற்பனைக்கதைகளில் அறிவுக்கு பொருந்தாத எவற்றையும் சொல்லிவிட்டுப்போகலாம் என்று நினைத்திருப்பார்கள்.

குந்திக்கு என்னண்டு பிள்ளை பிறந்தது, தசரதன்ரை மனிசிமாருக்கு எப்பிடி பிள்ளைகள் பிறந்தது, இராமனின்ரை அப்பா தசரதனில்லாவிட்டால், எந்தப்புரோகிதன் என்று ஆராய்வதெல்லாம் சுத்த வேஸ்ட்.

சும்மா உந்த கற்பனை கதைகளை கட்டிப்பிடிச்சுக்கொண்டு, ஆராய்ச்சி செய்யுறதும் விவாதம் வைக்குறதும், ஆண்டுவிழாக்கள் எடுக்குறதும், எப்ப எங்களை விட்டுப்போகுமோ அப்ப தான் எங்களுக்கு முன்னேற்றம்.

அந்தக்காலத்த்தில் தான் மக்கள் அறியாமை நிறைந்தவர்களாக இருந்தார்கள், அதனால் இப்படியான வக்கிரமான, அறிவுக்கு பொருந்தாத கதைகளை இயற்றி மக்களை நம்பவைக்க முடிந்தது.

இப்போதும், இவற்றையெல்லாம் உண்மையென்று நம்புகின்ற மக்கள் இருக்கின்றார்களே என்பது தான் கவலையளிக்கின்ற விடயம்.

அம்மக்களை என்னவென்று அழைப்பது என்று தான் எனக்கு விளங்கவில்லை.

மதுவர்மன் said...

Nedun,

சும்மா கற்பனைக்கதைகளையெல்லாம் ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் ஆராய்வது நேரவிரையமே தவிர வேறொன்றுமல்ல...

நாங்கல் முன்னேற இன்னும் எவ்வளவோ விடயங்கள் இருக்க சும்மா இராமாயனத்தையும் மகாபாரததையும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறதாலை ஒரு பிரயோசனமும் இல்லை.

மொத்தத்திலை, எங்களின் அடிமைச்சாசனங்கள் தான் அவை.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி