Thursday, June 26, 2008

தமிழ் தேசியப்போராட்டத்தில் சாதியத்தின் நிலைப்பாடு.

சாதியம் ப்ற்றிய விவாதம் நிர்ஷனின் பதிவில் காரசாரமாக நடந்துகொண்டிருக்கிறது. அதையிட்டே இப்பதிவை இடுகிறேன். "சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" நூலின் ஒரு அத்தியாயத்தின் ஒளிநகல்களை நூலாசிரியரின் அனுமதியுடன் இங்கே தருகிறேன். இதுசம்பந்தமாக கொங்கொங் ஈழவனின் பதிவையும் பாருங்கள். அவரது பதிவுக்கு இது பதிலாக அமையுமென நம்புகிறேன்.


1

2

3

4

5
6
7
8
9
10
11
12
13

Tuesday, June 24, 2008

அவிவேக பூரண புஷ்ஷும் அமெரிக்க மக்களும்....

அமெரிக்கா இவ்வளவு அட்டூழியமும் செய்ய, அமெரிக்க மக்கள் என்ன செய்கிறார்கள் எண்டு நெடுக யோசிக்கிறனான். இப்பத்தான் ஒரு நண்பர் அதுக்கு விடையை இ-மெயில் அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்....

Tuesday, June 17, 2008

ஹா.. ஹா.. ஹா.. சத்திய சாயிபாபா ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல்!

இது எப்படி இருக்கு? மக்களை காக்கிறானாம் மடைப்பயல். இப்ப இந்த மூதேவிக்கு பொலிஸ் பாதுகாக்கு கொடுக்கவேண்டியிருக்கு. சனத்துக்கு எப்பதான் புத்தி வருமோ?

தீவிரவாதிகளே, தயவுசெய்து இந்த ஏமாற்றுக்காரனை கொன்றுபோடுங்கள். நாட்டுக்கு நல்லதை செய்தவர்களாவீர்கள். இதுவரைக்கும் எவ்வளவு அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றான், இந்த ஏமாற்றுக்காரன், செப்படி வித்தைக்காரன், ஓரினச்சேர்க்கையாளன், சிறுவர் துஷ்பிரயோகி.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=3961


வீரகேசரி நாளேடு 6/16/2008 9:30:31 PM - ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டலையடுத்து மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பகவானைச் சந்தித்து அவரது பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேற்படி ஆச்சிரமத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இராமாயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந் நிலையில் தீவிர வாதிகள் சாய்பாபாவின் ஆச்சிரமத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஆச்சிரமத்தை சுற்றிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆச்சிரமத்திற்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டில் சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாய் பாபாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்: சாய்பாபாவுக்கு தீவிர வாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது சாய்பாபாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பற்றி நேரில் ஆய்வு செய்தேன்
என்றார்


மேலதிக தகவல்களுக்கு

Monday, June 16, 2008

விஞ்ஞானத்தை தாண்டி வித்தை இல்லை...

முன்குறிப்பு: இப்பதிவை வாசிக்கமுன், இதற்குமுன் இடப்பட்ட ”இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்” என்ற பதிவை வாசித்துவிட்டு வாருங்கள். அப்பதிவுக்கு விளக்கமளிப்பதாகவே இப்பதிவு அமைகின்றது.

விஞ்ஞானத்தை தாண்டி வித்தை இல்லை... இந்த வீதி வித்தைக்காரரின் பெயர் Johan Lorbeer, ஒரு ஜேர்மனியர். பெளதிகத்துக்கு ஒவ்வாத நிலைகளில் நின்று வித்தை காட்டுவதே இவரது தொழில்.

இவரது பல்வேறு நிலைகளையும் இறுதியில் அதற்குப்பின்னால் நிற்கும் விஞ்ஞான விளக்கத்தையும் பாருங்கள்.







சுவரிலே பிடித்துக்கொண்டிருப்பது அவரது கையல்ல. அதுவே அவரை தாங்கிநிற்கும் சட்டம்(frame).

அமானுஷ்யம் என்று எதுவுமில்லை... ஏதோ ஒன்று எமக்கு விளங்கவில்லையெனின், அதன் விஞ்ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறதென்பதே ஒழிய வேறில்லை.

Thursday, June 12, 2008

இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்

வீதியில் சாகசம் நிகழ்த்திக்காட்டும் இவர் அந்தரத்தில் நிற்கும் காட்சிகளை காணுங்கள்... வெறும் விபூதி குளிகை வித்தையைகாட்டுபவர்களே கடவுளாகும்போது இவர் அவர்களுக்கும் மேல் கடவுளாகலாம்...





இச்சாகசங்களுக்கு பின்னாலிருக்கும் தந்திரம் என்னவென்று அடுத்த பதிவில் தருகிறேன். அதற்கு முன் முடிந்தால் கண்டுபிடியுங்கள்...

Wednesday, May 28, 2008

நீங்கள் வாழ்கின்றீர்களா?

இலத்திரனியல் ஊடகங்களை கட்டியழுதுகொண்டிருக்கும் மக்களே....
நீங்கள் வாழ்வதாக நினைத்திருக்கும் வாழ்க்கை கணக்கை பாருங்கள்.

ஒரு நாளின் 24 மணிநேரத்தை
நித்திரை 8 மணித்தியாலம்,
வாழத்தேவையான பணத்தை சம்பாதிக்க 8 மணித்தியாலம்,
ஆக, உங்கள் வாழ்க்கை என்பது மீதியுள்ள 8 மணி நேரம் என்று பிரிக்க‌லாம்.

அதாவது, மொத்த வாழ்வில் மூன்றிலொரு பங்கை நித்திரையிலும் இன்னொரு மூன்றிலொரு பங்கை உழைப்பிலும் செலவிடும் நீங்கள், உண்மையாக வாழக்கூடியது மூன்றிலொரு பங்கு காலம்தான்.

கொழும்பில் வாழும் சராசரி மனிதனை உதாரண‌த்துக்கு எடுத்துக்கொள்வோம்.
அவர் தினமும் சக்தி TV பார்க்கிறார்.
அதிலே 13 தொடர் நாடகங்கள், ஒரு திரைப்படம் என்பன காட்டப்படுகின்றன.

அதைவிட Good Morning Sri Lanka என்று அரை வேக்காடுகளின் அலம்பல் நிகழ்சசி, cine Choice நெஞ்ச‌ம் மர(ற‌)ப்பதில்லை, புத்தம் புதுசு...போன்றனவும் காட்டப்படுகின்றன.


இவ‌ற்றுக்கான‌ மொத்த‌ நேர‌ம்

13 நாட‌க‌ங்க‌ள் = 6.5 ம‌ணித்தியால‌ங்க‌ள்
1 திரைப்ப‌ட‌ம்= 3 ம‌ணித்தியால‌ங்க‌ள்
செய்தி த‌விர்ந்த‌ ஏன‌ய‌ நிக‌ழ்ச்சிக‌ள் = 2.5 ம‌ணித்தியால‌ங்க‌ள்

ஆக மொத்த‌ம் 10 ம‌ணித்தியால‌ங்க‌ள்.

இதில் வேலைக்கு செல்ப‌வ‌ர் அரைவாசியைதான் பார்ப்பார் என்று வைத்துக்கொள்வோம்.

அவ‌ர‌து வாழ்க்கையில் மீத‌மிருப்ப‌து 3 மணித்தியால‌ங்க‌ள். அதிலும் இய‌ற்கைத்தேவைக‌ளான குளித்த‌ல், காலைக்க‌ட‌ன்க‌ள், உண்ணுத‌ல் போன்ற‌வ‌ற்றிற்கு 2 ம‌ணி நேர‌த்தை செல‌விடுகிறார் என்றும் வைத்துக்கொள்ளுவோம்.

ப‌ய‌ண‌த்தில் செல‌விடும் நேர‌த்தை 30 நிமிட‌ம் என்று வைத்துகொள்ளுவோம்.

ஆக‌வே அவ‌ர் வாழும் நேர‌ம் நாளொன்றுக்கு 30 நிமிட‌ம்.அதாவ‌து 1/48 நாள்.

48 வ‌ய‌தான‌ ஒருவ‌ர் வாழ்ந்த‌ கால‌ம் 1 வ‌ருட‌ம்...

எனவே நீங்கள் வாழ்வதாக நினைக்கிறீர்களா?


எடுகோள்க‌ள்‍‍ : ச‌ராச‌ரி ம‌னித‌னின் வாழ்வு தின‌மும் ஒரேமாதிரியாக‌த்தான் க‌ழிகிற‌து.
மீத‌மிருந்த‌ அரை ம‌ணி நேர‌த்துக்கு அவ‌ர் TV பார்க்க‌வில்லை.

Tuesday, May 27, 2008

பெண்ணியமெனும் பெயரினிலே.....

பெண்ணியம் என்ற பெயரில் கவிதை, கதை கட்டுரைகளூடாக விதைக்கப்படும் விஷ விதைகளை பார்த்து வெறுத்துப்போய் இப்பதிவை இடுகின்றேன். நான் பெண்ணியம் பற்றி எதிர்க்கருத்துக்களை கொண்டவனல்ல. பெண் விடுதலையின் அவசியம் பற்றியோ Gender Equality இன் அவசியம்பற்றியோ எந்தவிதமான எதிர்கருத்துக்கும் இடமில்லை. என்றாலும்,

அனேகமாக பெண்விடுதலை பற்றிக்கதைக்கும் எல்லோரும், ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை விடுத்து, ஆண்களெல்லோரும் பெண்களின் எதிரிகள் என்கிறமாதிரியாகத்தான் கூப்பாடு போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் இப்பூமியில் ஒன்றாக வாழவேண்டியவர்கள். ஆண்களை ஒதுக்கி பெண்களோ பெண்களை ஒதுக்கி ஆண்களோ வாழமுடியாது/கூடாது. ஆண்களிலாமல் வாழ, சந்ததிகளை உருவாக்கமுடியும் என்று கூறும் பெண்களே! ஆண்களிலாத சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? ஆண்களை எதிரியாக்கிகொண்டு ஆண்களும் வாழும் ஒரு சமுதாயதில் பெண்கள்மீதான வன்முறை, குடும்ப வன்முறையிலிருந்து சமூக வன்முறையாய்ப்போகும் ஒரு சூழ்நிலைதான் உங்கள் எதிர்பார்ப்பா?

பண்பாட்டு புரட்சியொன்றால் வென்றெடுக்கப்படவேண்டிய பெண்ணுரிமையை, ஆணெதிர்ப்பு சிந்தனைகளை தூண்டி பிரச்சினையை இன்னும் சிக்கலாக்க நினைக்கும் உங்களின் உள்நோக்கம்தான் என்ன? பெண்கள் மீதான அடக்குமுறையும் வன்முறையும் சமுகத்தில் புரையோடிப்போயுள்ளது. இதற்கு காரணம் நிச்சயமாக இந்த ஆணாதிக்க சமுதாய அமைப்புத்தான். காலங்காலமக விஷமூட்டப்பட்டு வந்த எங்களின் சிந்தனைமுறையை மாற்றுவதென்பது இலகுவான காரியம் இல்லைத்தான். ஆனாலும் முடியாத காரியமல்லவே?

சமயங்களும், காலங்காலமாக சொல்லப்பட்டுவந்த புராணக்கதைகளும், தற்போது தொலைக்காட்சிகளில் சீரியல்களில் காட்டப்படும் பிற்போக்குத்தனமான கருத்துக்களும் விதைக்கும் பெண்ணடிமைத்தனமான கருத்துக்களை தாண்டி இச்சமுதாயம் (பெண்களும் ஆண்களும்) பயணிக்கவேண்டிய தூரம் மிக நெடிது.

இச்சமயத்தில் ஒட்டுமொத்த ஆணாதிக்க சிந்தனைக்கும், பெண்கள்மீது வன்முறைபுரியும் தனிமனிதர்களுக்கும்(இருபாலாரும் இதிலடங்குவர்) எதிராக ஒட்டுமொத்த சமுதாய, பண்பாட்டு, சிந்தனை மாற்றத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

அதை விடுத்து, ஆண் vs பெண் வாதங்கள், கடுமையான சொற்பிரயாகங்களால் ஆண்களை வசைபாடுதல், ஐரோப்பிய பெண்ணியத்தை இறக்குமதிசெய்தல், பின்நவீனத்துவ பெண்நிலைவாதம் என்றபெயரில் பெண்களை விளிம்புநிலை மனிதர்களாக்குதல் போன்ற முட்டாள் தனமான விடயங்களை விடுத்து, ஆண் பெண் முரன்பாட்டை பகை முரண்பாடாக்கி, எக்காலத்திலும் தீர்க்கமுடியாததாக ஆக்காமல், சினேக முரண்பாடாகவே தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.

மனிதர்களை எந்தவொரு கோஷத்தின் கீழும் ஒன்றுசேரவிடாது, தனித்தனித் தீவுகளாக்கி சுலபமாக சுரண்டுவதற்கான வழிமுறைகளே இப்போது நடைபெறுகின்றன. அதற்கு பெருந்தடையாக இருப்பது குடும்பம் என்ற அடிப்படை அலகுதான். குடும்பக்கட்டமைப்பை உடைக்கும்படிக்குத்தான் இன்றய கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்றன.

மனிதன் என்பவன் தனி அலகு, அவன் சமூக விலங்கு அல்ல.
குடும்பமே பெண்கள் மீதான வன்முறைக்கு அடிப்படை காரணம். அதனால் குடும்பத்தை உடையுங்கள்.
சேர்ந்து வாழும்(living together) கலாசாரத்துக்கு மாறுங்கள்.
ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் எதிரிகள்.....

மொத்தத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துங்கள் என்பதுதான்.

இப்படியான கருத்துக்களை விதைப்பவர்கள் எல்லோரும் என்னைப்பொறுத்தவரையில் மக்களை பிரித்து தனி அலகுகளாக்கி சுரண்ட நினைக்கும் சக்தியொன்றின் ஏஜென்டுகளே. இப்படியான வரட்டு பெண்ணியம் கதைப்பவர்கள், தாங்கள் ஏஜென்டுக்களல்ல என்று நம்பினால், ஆண் எதிர் பெண் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு, பெண்ணடிமைத்தனம், பெண்கள்மீதான வன்முறை, பால்நிலை சமமின்மை என்பவற்றுக்கு எதிராக போராட ஒன்றிணையவேண்டும்.

பி.கு:

இதுசம்பந்தமாக அண்மையில் படித்து வெறுத்துப்போன கவிதை ஒன்று...
வீரியம் குறைந்த ஆண்குறி...!

இதைவிட, தாயகம்(2008 ஏப்ரல்-ஜூன்) இதழில் சந்திரகாந்தா முருகானந்தன் என்பவர் எழுதிய கவிதையில் ஆண் என்ற கொடூரனால் குடும்ப வன்முறைக்குட்படுத்தப்பட்ட தான், முலை யோனி ஆகியவற்றை துறப்பதாக எழுதியிருந்தார். உண்மையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் இவ்வாறு எழுதியிருந்தால் விரக்தியால் எழுந்த வார்த்தைகளெனலாம். ஆனால் இக்கவிஞர் பாதிக்கப்பட்டிராவிட்டால் இக்கவிதை போன்ற அயோக்கியத்தனம் வேறெதுவுமில்லை.