இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை. வீட்டை நான் கவனித்துக்கொள்வேன். அவர் சாப்ட்வெயர் கம்பனி ஒன்றில் கைநிறைய காசுடன்...
காலையில் எழுந்தால் எனக்கு இயலுமானவரை ஒத்தாசை செய்வார். வார இறுதிகளில் விழுந்து விழுந்து உதவிசெய்வார். பகலென்றல்ல எநத நேரமும் எனக்கு அவர் குறை வைத்தில்லை.
இன்று ஞாயிற்றுக் கிழமை, மணி ஆறரைக்கே காப்பியைக் கொண்டு பெட்ரூமிற்குச் சென்றேன். காப்பியை அருகில் வைத்துவிட்டு எழுப்பப் போனேன்.
"ஆகா, திரும்பவுமா? இரவு நடு ஜாமத்தில ஒருமுறை...இப்போ திரும்பவுமா?"
இரவு நடுஜாமம் தான் உடுப்பெல்லாம் மாத்திப்போட்டுப் படுத்தது. இப்போ என்னால மீண்டும் மாத்தமுடியாது.
விடிஞ்சு ஒரு மணியாச்சு இந்த நேரத்திலயுமா?...சலித்துக்கொண்டேன்.
"இஞ்சை ஒருக்கா வாறீங்களா...." சிறிது சத்தமாகக் கூப்பிட்டேன்.
"ஏன் என்ன நடந்தது?..." ஓடி வந்தார் கிச்சனிலிருந்து.
"பாருங்கோ மகன் செய்திருக்கிற வேலையை, இரவுதான் எல்லாம் மாத்திப்போட்டுவிட்டது, இப்ப திரும்பவும் பெட்ல யூரின் போய்ட்டான்"
"சரி விடுங்கோ, கிச்சனில காப்பி போட்டபடி இருக்குது போய்ப் பாருங்கோ நான் இவனை எழுப்பி எல்லாம் செய்யுறன்"
இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை.
- மதுவதனன் மௌ. -
Sunday, July 20, 2008
இரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா?
Tuesday, April 22, 2008
சகியே
கயல் மீனோடும் விழிகளினால் வீணைமீட்டி – மனதில்
காதல் இராகமிசைத்து – என்
விழி வழியே உலாவி – எனை
பாடாய் படுத்திய உயிர் வலியே
பார்வையினாலே எனைப் பருகி – இன்று
பார்த்தும் பார்க்காமல் போக – நம்
காதலையும் விதி போல்டு செய்ததா
கண்களை காண இமைகளே மறுப்பதா
கண்கள் கலங்கி சிவக்கின்றனவே – அந்த
கரைகின்ற மாலைப்பொழுதினைப்போல
எனைப்போல் காதல் வலியால் தவிக்கின்றதோ
Wednesday, February 13, 2008
நாளை காதலர் தினம்!!!
நண்பன்: காதலைப் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: அனுபவம் போதாதடா. இதுவரை நான் காதலித்தது இருபது பெண்களைத்தானடா.
நண்பன்: காதலர் தினம் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: வழமையான வருடங்களில் நாற்பத்தாறு நாட்கழித்தும்; நான்கு வருடங்களுக்கொருமுறை நாற்பத்தேழு நாட்கழித்தும் வந்திருக்க வேண்டியது...
Thursday, January 3, 2008
காதலை பற்றி ...........
காதல் ஒரு கத்தரிக்காய்
அழுகினால் உதவாது
காதல் ஒரு வெங்காயம்
க்டைசியில் கண்ணீர் தான் மிச்சம்
காதல் ஒரு பாவற்காய்
பார்க்க பசுமை ருசிக்க கொடுமை
காதல் ஒரு பூசனிக்காய்
கல்யாணத்துக்கு முன் திருஷ்டி