Showing posts with label விஞ்ஞானம். Show all posts
Showing posts with label விஞ்ஞானம். Show all posts

Tuesday, August 25, 2009

கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

ஒருவரை பார்த்து, 'இதுவா அதுவா, எது முதலில் வந்தது அல்லது எதிலிருந்து எது வந்தது’ என்று வெளிப்படையாக விடை சொல்லமுடியாத கேள்வி'யொன்றை கேட்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு இதற்கான விடை உடனடியாக தெரியாதாயின், மாறாக உங்களை மடக்குவதற்காக அவர் உடனடியாக உங்களை நோக்கி ஒரு கேள்வியை எடுத்துவிடுவார். ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று சொல்லுங்கள்' என்று உங்களை கேட்பார். நீங்களும் எது முதலில் வந்தது என்று சொல்லமுடியாது விழிப்பீர்கள். உடனே அவர் ‘அவ்வாறே உங்களுடைய முன்னைய கேள்விக்கும் விடையளிப்பது கடினம்' என்பார்'

மேற்படி சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் சந்தித்திருக்கின்றேன். பெரிய அறிஞர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் கூட இவ்வாறு நடந்ததை கண்டிருக்கின்றேன். அவ்வாறே நீங்களும் சந்தித்திருப்பீர்கள். சரி, கோழியா முட்டையா, எது முதலில் வந்தது என்பது பற்றி இங்கே இப்போது ஆராய்வோம்.
 

“ …இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக

எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட

அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை

வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?'

என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது

சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்?

குழப்பமாக இருக்கின்றதா?… " 


கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

கோழிக்கு முன்பே முட்டையிடக்கூடிய வேறு உயிரினங்கள் இருந்துள்ளன தானே. உதாரணத்துக்கு, உயிர்ப் பரிணாமத்தில் (Biological Evolution), நகருயிர்களின் (Reptiles) பின்பு தான், பறவைகள் உருவாகியிருந்தன. டைனசோர் போன்ற நகருயிர்கள் பறவைகள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. ஆகவே கோழியை விட, 'முட்டை' தானே முதலில் வந்திருக்கவேண்டும். இது கொஞ்சம் சுவாரசியமான விளக்கமாக இருக்கின்றது இல்லையா!

அவ்வாறல்ல, இங்கே கேள்வியிலே கொஞ்சம் குழப்பமிருக்கின்றது. கோழியா, முட்டையா என்பதற்கு பதிலாக கோழியா, கோழிமுட்டையா, என்றவாறு கேள்வி இருந்திருக்கவேண்டும். முட்டை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டால், அது கோழிமுட்டையல்லாத முட்டைகளையும் உள்ளடக்கி, டைனசோர்களையும் உள்ளே கொண்டுவந்துவிடும். ஆகவே கேள்வி ‘கோழியா, கோழிமுட்டையா, எது முதலில் வந்தது?' என்று அமையவேண்டும்.

இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?' என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்? குழப்பமாக இருக்கின்றதா?

மனிதத் தாயிலிருந்து குழந்தை வருகின்றது (பிறக்கின்றது). குழந்தை பிறந்த பின்பும், தாய் தாயாக இருக்கின்றாள், குழந்தை என்று புதிய ஒரு பொருள் வந்திருக்கின்றது. ஒன்றிலிருந்து இன்னொன்று வந்து, இப்போது இரண்டாக இருக்கின்றது.

அவ்வாறே, கோழி முட்டையிடுகின்றது. அதுவே கோழியிலிருந்து முட்டை வருகின்றது. அங்கேயும் கோழி கோழியாக இருக்கின்றது, முட்டை என்று ஒரு புதிய பொருள் வந்திருகின்றது.

இவற்றை வைத்து இப்போது சொல்லுங்கள். முட்டையிலிருந்து கோழி வருகின்றதா அல்லது முட்டையே கோழியாக மாறுகின்றதா?

ஆம், முட்டைக்குள் உயிர், இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அந்த முட்டை அப்படியே கோழியாக மாறுகின்றதேயொழிய, முட்டையிலிருந்து கோழி வருவதில்லை. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கும்போது, இப்போது முட்டை இல்லை, கோழிக்குஞ்சு மட்டும் தானே எஞ்சியுள்ளது. இது உரு மாற்றம் தானே. ஒன்று இன்னொன்றாக மாறி எஞ்சியுள்ளது ஒன்றுதானே.

ஆகவே, இன்னும் யாராவது உங்களை பார்த்து, கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்த் கோழி வந்ததா என்று கேட்பாராயின், அவரது கேள்வியை திருத்தவேண்டியது உங்கள் பொறுப்பு. ஏனென்றால், தர்க்கரீதியாக அக்கேள்வி பிழையானது. இபோது சரியான கேள்வி ‘கோழியா (கோழி) முட்டையா, எது முதலில் வந்தது?' என்பதே. 'ஒன்றிலிருந்து மற்றது' என்ற முறையை விட்டுவிடவேண்டும், ஏனென்றால் இருவழிக்கும் அது பொருந்தவில்லை.

கோழிமுட்டை என்றால் என்ன என்று உங்களை கேட்டால் உடனே சொல்வீர்கள் ‘கோழி இட்ட முட்டை தான் கோழிமுட்டை' என்று. ஆனால், உயிரியலின்படி, அவ்வாறிருக்கவேண்டியதில்லை. கோழியல்லாத விலங்கு (பறவை) கூட கோழிமுட்டையை இடமுடியும். அதை பின்பு விளக்குகின்றேன். இலகுவாக ஒருவரியில் சொல்வதானால், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்வது போல தான்.

மாறாக, உயிரியலின்படி, கோழியாக மாறக்கூடிய முட்டையே கோழிமுட்டையாக இருக்கமுடியும். அதாவது, எந்த முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கின்றதோ (முட்டை கோழியாக மாறுகின்றது) அந்த முட்டை நிச்சயமாக கோழிமுட்டையாக தானே இருக்கமுடியும்.

தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வந்த கணத்திலிருந்து நாங்கள் குழந்தையின் வயதை கணிக்கத்தொடங்குகின்றோம். மாறாக, அக்கணத்துக்கு ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு முன்பே குழந்தையின் உருவாக்கம்(ஆரம்பம்) தொடங்கிவிட்டது என்பது தானே உண்மை. அதாவது தந்தையின் விந்துக்கலமொன்றும் (Sperm Cell), தாயின் முட்டைக்கலமொன்றும் (Ovum) கருப்பையில் இணைந்து, குழந்தையை உருவாக்கக்கூடிய முதலாவது கலம் (நுகம் - Zygote) உருவாக்கப்பட்டபோதே குழந்தையின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அந்த ஒரு கலம் பின்பு பல கலங்களாக பிரிவடைந்து நேரத்துடன் முழுமையான குழந்தையாக உருமாறுகின்றது. குழந்தையின் நடத்தைகள், உடலியல்புகள் எவ்வாறு இருக்கும் என்ற விடயங்களெல்லாம், அந்த முதலாவது கலத்திலேயே, தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.

உயினமொன்றின் மொத்த இயல்புகளையும் தீர்மானிப்பது அதன் கலங்களிலுள்ள DNA யாதலால், DNA யில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காரணமாக, இயற்கையில், உயிரினங்கள் பரிணாமமடைகின்றன. கோழி போன்ற விலங்கினத்தில், ஆண்விலங்கின் விந்துக்கலத்திலிருந்தும் (Sperm), பெண்விலங்கின் முட்டைக்கலத்திலிருந்தும் (Ovum) (இது கோழிமுட்டையல்ல) DNA மூலக்கூறுகள் ஒன்றுசேர்ந்து, நுகம் (Zygote) - கோழிக்குஞ்சொன்றின் முதலாவது கலம், உருவாகின்றது. இந்த முதற்கலம் எண்ணுக்கணக்கற்ற தடவைகள் கலப்பிரிவுக்கு (ஒரு கலம் இரண்டாக பிரிந்து, இரு புதிய கலங்கல் உருவாதல்) உள்ளாகி, ஒரு முழுமையான விலங்குக்குரிய கலங்கள் உருவாகின்றன. எந்த ஒரு விலங்கிலும், எல்லாக் கலங்களும் ஒரே மாதிரியான DNA மூலக்கூறகளையே கொண்டிருக்கும் அந்த DNA முதலாவது கலமான நுகத்திலிருந்தே (Zygote) வருகின்றது.

ஆணினதும், பெண்ணினது DNA கலப்பினால் ஏற்பட்ட சிறிய மாற்றங்களினாலோ அல்லது, நுகத்தை (Zygote) உருவாக்கிய DNA யில் ஏற்பட்ட விகாரங்களினாலோ (Mutation) கோழியல்லாத உரிரினங்களிலிருந்து கோழிகள் பரிணாமமடைந்தன. இந்த மாற்றங்களும், விகாரங்களும் (Mutations) நுகம் (Zygote) உருவாகும் தருணத்தில் மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தவல்லன. அதாவது, கோழியல்லாத இரு விலங்குகள் (இன்னும் சிறப்பாக பறவைகள்) இணைசேர்ந்தன, அவற்றினுடைய புதிய நுகத்திலிருந்த (Zygote) DNA, முதலாவது உண்மையான கோழியை உருவாக்கிய அந்த விகாரத்தை (அல்லது விகாரங்களை - mutations) கொண்டிருந்தது. அந்த ஒரு நுகக்கலம் (Zygote) கலப்பிரிவடைந்து முதலாவது உண்மையான கோழியை உருவாக்கியது

முதலாவது, உண்மையான கோழியாக உருவாகிய அந்த நுகத்துக்கு முன்பு, கோழியல்லாத விலங்குகள் மாத்திரமே இருந்தன. புதிய விலங்கொன்றை உருவாக்கக்கூடிய DNA விகாரங்கள் (mutations) ஏற்படக்கூடிய ஒரேயொரு இடம், நுகக்கலம் (Zygot) மாத்திரமே. அந்த நுகக்கலம் கோழியினுடைய முட்டையினுள்ளே கொண்டிருக்கப்பட்டுள்ளது. அதாவது, கோழி முட்டையென்பது ஒரு நுகம் - கோழியாக உருவாகப்போகின்ற அந்த உயிரினத்தின் முதலாவது கலம். ஆகவே முட்டையே முதலில் வந்திருக்கவேண்டும் என்பது, சந்தேகத்துக்கு இடமில்லாது நிரூபணமாகின்றது.

காலாகாலத்துக்கும் விஞ்ஞானிகளையும், தத்துவாசிரியர்களையும், ஏன் எங்கள் எல்லோரையுமே குழப்பத்திலாழ்த்திக்கொண்டிருந்த இந்த கேள்விக்கு, இப்போது விஞ்ஞானம் விடையளித்துள்ளது. இன்னும் இதுபற்றி (அறியாமையால்) குழம்பி/குழப்பிக்கொண்டிருப்பவர்களை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பும் இதை அறிந்தவர் கைகளிலேயே உள்ளது.

குறிப்பு: இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவருகின்ற 'பயில்நிலம்' காலாண்டு சஞ்சிகையின், 2009 இன் முதல் காலாண்டு இதழில் வெளிவந்தது.


உசாத்துணை
2. Which came first, the chicken or the egg? http://science.howstuffworks.com/genetic-science/question85.htm
3. Chicken and egg debate unscrambled http://www.cnn.com/2006/TECH/science/05/26/chicken.egg/
4. Which Came First? Eggs Before Chickens, Scientists Now Say http://www.livescience.com/animals/081114-chicken-or-egg.html
5. Chicken and egg question answered http://www.guardian.co.uk/science/2006/may/26/uknews

Tuesday, October 7, 2008

இயற்பியலுக்கான நோபல் பரிசு




இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நேபல் பரிசு 3 பேருக்கு கிடைத்துள்ளது. இவை யாவும் அணு பற்றியது (sub atomic ).

யப்பானை பிறப்பிடமாகவும் ஜக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட இய‌ற்பியல் பேராசிரியர் Yoichiro Nambu . இவருக்கு நேபல் பரிசு கிடைப்பதற்கான காரணம் "for the discovery of the mechanism of spontaneous broken symmetry in subatomic physics " (மன்னிக்க வேண்டும் இதை என்னால தமிழ் ஆக்க முடியவில்லை)

இவருடைய சுயவிபரம்



பிறந்தது 1921 யப்பானில் தலைநகரம் டோக்கியோ...

அமெரிக்கா பிரயாவுரிமை..

University of Chicago

இக்கே இவருடைய முடிவை ஆங்கிலத்தில் தருகிறேன்.

The fact that our world does not behave perfectly symmetrically is due to deviations from symmetry at the microscopic level

" ஒரு உண்மையான விசயம் என்னவென்றால் இந்த உலகத்தில் எதுவும் அச்சொட்டான சமச்சீரில்லை. காரணம் என்னவென்றால் சமச்சீர் என்பது விலத்தி நிற்க்கின்றது துணிக்கை மட்டத்தில் " (மொழி பெயர்ப்பில் பிழையிருந்தால் மன்னிக்கவும் மற்றும் திருத்தவும்).

இந்த நேபல் பரிசு அறிவித்த போது. அவர் துக்கத்தில் இருந்தார். இவருக்கான பரிசுத்தொகை சுமார் $1.4 மில்லியன் அமெரிக்க டோலர்.

மற்றாவர்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள்.

முதலாம்மவர் பேராசிரியர் Makoto Kobayas



இரண்டாம்மவர் பேராசிரியர் Toshihide Maskawa


இரண்டுபேருடைய பங்களிப்பு ஒன்று சார்ந்ததாகவே இருக்கின்றது. அதாவது "for the discovery of the origin of the broken symmetry which predicts the existence of at least three families of quarks in nature"

Makoto Kobayas, இவருக்கான நோபல் பரிசு 0.7 மில்லியன் அமெரிக்க டோலார்.

Toshihide Maskawa ,இவருக்கான நோபல் பரிசு 0.7 மில்லியன் அமெரிக்க டோலார்.

Monday, September 22, 2008

புரோட்டன் மோதலுக்கு நடந்தது என்ன!


பொதுவாக திரவ நிலை நைதரசன் குளிருட்டும் ஊடகமாக பாவிக்கப்படுகிறது. இது அண்ணளவாக -200 செல்சியஸ். ஆனால் CERN இல் திரவ நிலை ஹீலியம் (-271 செல்சியஸ்) குளிருட்டும் ஊடகமாக பாவிக்கப்படுகிறது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றது. ஒன்று பூச்சியத்தடை கடத்தியை(super conductivity) உருவாக்குதல், மற்றையது பரிசோதனையில் உருவாக்கும் வெப்ப சக்தியை சமப்படுத்துதல்(வெப்ப நிலையை -271 செல்சியஸ் (அண்ணளவாக 1.7 கெல்வின்)) .



திரவ நிலை ஹீலியத்தில் ஏற்பட்ட ஒழுக்குதான் பிரச்சனைக்கு காரணம். அது பற்றி ஒரு செய்தி தான் இது.

ஜெனீவா: "Big Bang" மூலம் எப்படி நமது அண்டம் (யுனிவர்ஸ்) தோன்றியது என்பதைக் கண்டறியும் நம்பிக்கையோடும், இந்த சோதனையால் உலகமே அழிக்கப் போகிறது என்ற கூக்குரலுடனும் ஆரம்பிக்கப்பட்ட புரோட்டான் சிதைப்பு ஆராய்ச்சிக்கு பிரேக் விழுந்துவிட்டது.

புரோட்டான்களை சிதைக்கும் Large Hadron Collider (LHC) கருவில் பெரிய ரிப்பேர்.

ஜெனீவாவுக்கு அருகே 27 கி.மீ. சுற்றளவில் பூமிக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் கருவியில் புரோட்டான்களை சிதறடிக்கும் சோதனைகள் இரு இடங்களில் நடக்கின்றன.

LHCல் 13.5 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளன அட்லஸ், CMS என்ற இரு கருவிகள். LHCல் புரோட்டான்கள் எதிரெதியே பாய்ச்சப்பட்டு மோதி சிதறும்போது என்ன நடக்கிறது என்பதை ரிஜிஸ்டர் செய்யும் கருவிகள் தான் இவை.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகால கட்டுமானத்துக்குப் பின் கடந்த 10ம் தேதி இந்தக் கருவிகள் இயக்கப்பட்டன. முதல் கட்டமாக கடிகாரச் சுற்றில் புரோட்டான் கதிர்வீச்சுகள் செலுத்தப்பட்டன.

இந்த கதிர்வீச்சு ஒளியின் வேகத்தை எட்டிப் பிடித்தபின் எதிர் திசையில் இன்னொரு புரோட்டான் கதிர்வீச்சை செலுத்தி மோத வைக்க இருந்தனர்.

இந்த கதிர்வீச்சை செலுத்துவது, அதற்கு ஒளியின் வேகத்தைத் தருவது ஆகிய வேலைகளைச் செய்வது மாபெரும் மின் காந்தங்கள் (Super conducting electro magnets).

புரோட்டான்கள் மோதலின்போது பெரும் அளவில் வெப்பம் உருவாகும் என்பதால் இந்த 27 கி.மீ. தூரச் சுற்றளவிலும் எல்லா கருவிகளிலும் வெப்ப நிலையை மைனஸ் 271.30 டிகிரி செல்சியசுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். அந்த வேலையைச் செய்வது ஹீலியம்.

புரோட்டான் சோதனை ஆரம்பித்த ஒரு வாரத்தில் மின் காந்தங்களுக்கு இடையிலான மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட மின் பொறியால் ஹீலியம் வாயுவை கொண்டு செல்லும் பைப்புகள் சேதமடைந்துவிட்டன.

இதனால் ஹீலியம் வெளியேறி வெப்ப நிலை தாறுமாறாக அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இந்தச் சோதனையைத் தொடர்வது ஆபத்து என்பதால் LHCன் செயல்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.

பைப்பில் அடைப்பை சரி செய்துவிட்டு திரும்பவும் LHCயை ஆன் செய்ய வேண்டியது தானே என்கிறீர்களா?. அது அவ்வளவு எளிதல்ல.

முதலில் இந்த 27 கி.மீ. சுற்றளவு கொண்ட LHCயை சுற்றுப்புற வெப்ப நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்த 27 கி.மீ. சுற்றளவிலும் வெப்ப நிலையை room temperatureக்கு கொண்டு வரவே சில வாரங்கள் பிடிக்குமாம்.

அதன் பின்னர் மின் காந்தங்களுக்கு இடையிலான மின் இணைப்புகளை சரி செய்து, ஹீலியம் குழாய்களை சரி செய்து, மீண்டும் ஹீலியத்தை குழாய்களில் அடைத்து LHCயை இயக்க 2 மாதங்களாவது ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒவ்வொரு பொருளும் அணுவால் ஆனது. அந்த அணு நியூட்ரான், புரோட்டான், எலெக்ட்ரானால் ஆனது. இந்த புரோட்டானும், நியூட்ரானும், எலெக்ட்ரானும் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், இத்யாதி.. இத்யாதியால் ஆனவை.

அப்போ குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ், மற்றவை எல்லாம் எதனால் ஆனவை..?. Higgs Boson என்ற பார்ட்டிகிளால் ('கடவுளின் துகள்கள்') ஆனது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இது தான் அணுவுக்கும் பொருட்களுக்கும் 'நிறை'யை (Mass) தருகிறது என்கிறார்கள். (ஒரு பொருளின் எடை மைனஸ் அதன் மீதான புவி ஈர்ப்பு சக்தி தான் அதன் நிறை)

மேலும் குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ் எல்லாம் உருவாவதற்கு முன் என்ன இருந்திருக்கும்..?. அதை 'பிளாஸ்மா ஸ்டேஜ்' என்கிறார்கள். அதி வெப்ப வாயு நிலையில் அணுக்கள்... இது தான் பிளாஸ்மா.

ஏன் அந்த பிளாஸ்மா குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ் ஆக மாறி.. புரோட்டானாகி.. அணுவாகி.. மூலக்கூறாகி 'எல்லாமுமாய்' ஆனது என்பதைத் தான் LHC மூலம் கண்டறிய முயல்கிறார்கள்.

இப்போது ஹீலியம் லீக் இந்த சோதனைகளுக்கு இடையூறாகியிருக்கிறது.. முதலில் இதை சிறிய பிரச்சனையாகத் தான் நினைத்தார்களாம். ஒரு வாரத்தில் மீ்ண்டும் LHC ஓட ஆரம்பிக்கும் என்றார்கள்.

ஆனால், உள்ளே நுழைந்து பார்த்த பின்னர் தான் பிரச்சனை 'யுனிவர்ஸ்' அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் பெரிதானது தான் என்பது தெரிந்ததாம்.


நன்றி http://thatstamil.oneindia.in/news/2008/09/22/world-small-accidents-mean-big-trouble-for-supercollider.html

Wednesday, September 10, 2008

புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்! கடவுளின் துணிக்கை ?

ஜெனீவா: உலகே மிக ஆர்வமாக எதிர்நோக்கியிருக்கும் புரோட்டான் மோதல் சோதனை இன்று தொடங்கியது.



27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள டனலில் முதல் புரோட்டான் கதிர்வீச்சு இன்று சோதனைரீதியில் பாய்ச்சப்பட்டது.

ஜெனீவாவுக்கு அருகே உள்ள CERN அணு ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை தொடங்கியது.

இந்த சோதனையால் உலகமே அழியப் போகிறது என்று கூக்குரல்கள் ஒரு பக்கம் எதிரொலிக்க இந்த முயற்சி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.



இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டான ஒரு பொளதிகவியளார்

இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி பிளாக் ஹோல் எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.



அதே நேரத்தில் இந்த சோதனை மூலம் 'Higgs Boson' என்ற சப்-அடாமிக் பார்ட்டிக்கிளை கண்டுபிடித்துவிட முடியும் என CERN விஞ்ஞானிகளின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், மானுடத்தின் அடுத்தகட்ட வளர்சிக்கு இந்த சோதனை மிக மிக அவசியம்.

எல்லோரையும் போலவே நானும் இந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இன்று இந்த சோதனைகள் தொடங்கினாலும் கூட புரோட்டான்கள் முழு வேகம் பிடித்து ஒன்றோடு ஒன்று மோதிச் சிதற பல மாதங்கள் ஆகும். ஒரு வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.

இன்றைய சோதனையில் புரோட்டான் கதிர்வீச்சு கடிகார சுற்றுக்கு எதிர்சுற்றில் பாய்ச்சப்பட்டது. இந்த கதிர்வீச்சு 27 கி.மீ. நீள Large Hadron Collider-ல் சரியாக பயணித்தால், அடுத்ததாக எதிர் திசையில் இருந்து இன்னொரு புரோட்டான் கதிர் பாய்ச்சப்படும்.

இன்று நடப்பது வார்ம்-அப் சோதனை தான். முழுமையான சோதனை 6 வாரத்தில் தொடங்கும்.

அப்போது எதிரெதிர் திசையில் தலா 2,808 புரோட்டான் கதிர்கள் எதிரெதிரே பாய்ச்சப்படும். அதாவது பல பில்லியன் புரோட்டான்கள் ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் மோதிச் சிதறும்.

அதன் பின்னர் தான் பிளாக் ஹோல் வருகிறதா அல்லது Big Bang தியரிப்படி உலகம் எப்படித் தோன்றியது என்பதற்கான விடையும் கடவுளின் அணுத் துகள்கள் என்று சொல்லப்படும் 'Higgs Boson' தெரிகிறதா என்பதும் தெரியும்.

நன்றி தட்ஸ்தமிழ் ஆசிரியர்

Tuesday, September 9, 2008

உலகின் மிக ஆபத்தானதும் சவால் நிறைந்ததுமான பெரும் அறிவியல் சோதனை!


உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' (Doom's day) ஆசாமிகள்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.

ரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் நடைமுறையாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும்(Proton) நியூட்ரான்களையும்(Neutron) அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் அக அணுத் துகளக்ள் (Sub Atomic Particles) (Proton, Neutron) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ குழாயை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு வலிமைப்படுத்தப்பட்ட சீமெந்து மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த Collider.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான Cyclotron மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட Cyclotronகளை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 'மீ கடத்து (Super Conducting)' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களில் 7 டிரில்லியன் (Trillion) எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான உணரிகள்(Sensors) கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தில் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டுள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது கருந்துளை (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (கருந்துளை நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னிக்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே கருந்துளைகளும்.

இந்த கருந்துளைகள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக அக அணுப் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் கருந்துளை உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..

'தெரியாது'

Higgs Boson! கடவுளே!

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

நன்றி http://thatstamil.oneindia.in/news/2008/09/10/world-atom-smasher-starts-operation-to-probe-universes.html