
சமீபத்தில் Yahoo Mobile ஆனது குரல் வழி மூலமான தேடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் உங்கள் தேடலை குரல் மூலமான கட்டளைகளை உங்கள் Mobileக்கு பிறப்பிப்பதன் மூலம் இலகுவாக்கிக்கொள்ளலாம். உதாரணத்துக்கு http://mobile.yahoo.com/ என்பதை உங்களின் Mobile WAP Browser தட்டச்சு செய்து tamilgarden என குரல் எழுப்பினால் போதும் தமிழ் பூங்கா சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் உங்கள் Browser ல் தரும்.
தகவல் தொழில் நுட்ப்பத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய பங்கினை வகிக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. Google உடன் போட்டி போடுவதற்கு பல வழிகளில் Yahoo முயற்சி செய்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடே இந்த Yahoo One Search. எது எவ்வாறாயினும் நமக்கு நல்ல சேவை கிடைத்தால் போதும் தானே (ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே :).
Monday, July 21, 2008
Yahoo Mobile இன் குரல்வழி தேடல்
ஜப்பானியர்கள் நடனமாடுகின்றார்கள் - தமிழ்சினிமா பாடல்களுக்கு!
தமிழ்சினிமா பாடல்களுக்கு ஜப்பானிய இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் நடனமாடும் சில வீடியோக்களை இங்கே பாருங்கள்.
இவை, தமிழ் மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக இணையத்தில் தேடி ஆராய்ந்தபோது அகப்பட்டவை. அத்தொடர்பு சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்துவந்த ஜப்பானிய பேராசிரியரொருவர் அண்மையில் காலமான செய்தி அனைவரும் அறிந்ததே.
வீடியோ 1
வீடியோ 2
வீடியோ 3
வீடியோ 4
வீடியோ 5
வீடியோ 6
Sunday, July 20, 2008
இரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா?
இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை. வீட்டை நான் கவனித்துக்கொள்வேன். அவர் சாப்ட்வெயர் கம்பனி ஒன்றில் கைநிறைய காசுடன்...
காலையில் எழுந்தால் எனக்கு இயலுமானவரை ஒத்தாசை செய்வார். வார இறுதிகளில் விழுந்து விழுந்து உதவிசெய்வார். பகலென்றல்ல எநத நேரமும் எனக்கு அவர் குறை வைத்தில்லை.
இன்று ஞாயிற்றுக் கிழமை, மணி ஆறரைக்கே காப்பியைக் கொண்டு பெட்ரூமிற்குச் சென்றேன். காப்பியை அருகில் வைத்துவிட்டு எழுப்பப் போனேன்.
"ஆகா, திரும்பவுமா? இரவு நடு ஜாமத்தில ஒருமுறை...இப்போ திரும்பவுமா?"
இரவு நடுஜாமம் தான் உடுப்பெல்லாம் மாத்திப்போட்டுப் படுத்தது. இப்போ என்னால மீண்டும் மாத்தமுடியாது.
விடிஞ்சு ஒரு மணியாச்சு இந்த நேரத்திலயுமா?...சலித்துக்கொண்டேன்.
"இஞ்சை ஒருக்கா வாறீங்களா...." சிறிது சத்தமாகக் கூப்பிட்டேன்.
"ஏன் என்ன நடந்தது?..." ஓடி வந்தார் கிச்சனிலிருந்து.
"பாருங்கோ மகன் செய்திருக்கிற வேலையை, இரவுதான் எல்லாம் மாத்திப்போட்டுவிட்டது, இப்ப திரும்பவும் பெட்ல யூரின் போய்ட்டான்"
"சரி விடுங்கோ, கிச்சனில காப்பி போட்டபடி இருக்குது போய்ப் பாருங்கோ நான் இவனை எழுப்பி எல்லாம் செய்யுறன்"
இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை.
- மதுவதனன் மௌ. -
Saturday, July 19, 2008
டபிள் ஏ (அடல்ஸ ஒன்லி இல்லைங்க)
வீடியோ சாமாச்சாரம்தான் ஆனா அடல்ஸ் ஒன்லி இல்லைங்க. இது எனக்கும் எனக்கு நெருக்கமான காகிதம் பற்றியதுமான ஒரு சிலாகிப்பு. டபிள் ஏ காகிதத்தின் மேல் எனக்கு ஏதோவொரு ஈடுபாடு. இந்த சலனப்படங்களைப் பார்த்து வந்ததல்ல அதன் முன்னமே வந்தது. அதன் மேலுறையின் வடிவமும் உள்ளே பால்வெண்மையும் எழுதினா அதன்மேல்தான் எழுதுவேன் என்று பல்கலைக்கழக காலம் முழுவதும் பந்தாவில பணத்தைச் செலவழிச்சது கூட அதன் மேலான கவர்ச்சிதான்.
கீழே இருக்கிற வீடியோக்களைப் பாருங்கோ. சூழலும் வருகின்றவர்களும் கூட டபிள் ஏ யின் வண்ணங்களுடன் சம்பந்தமாகத்தான் வருகிறார்கள்.
வீடியோ ஒன்று.
வீடியோ இரண்டு
வீடியோ ஒன்றைப் பார்த்து மீளப் பார்க்க விரும்புகிறவர்கள் இதைப்பார்க்கலாம்.விடயம் ஒன்றுதான் ஆட்கள் வேற. :-)
இல்ல அதே விடயம் இன்னும் வேற ஆட்களோட பாக்கவேணும் என்றவர்கள் இந்த யூடியூப் சுட்டிக்குப் போங்கோ.
- மதுவதனன் மௌ. -
Thursday, July 17, 2008
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...........
1995 ஆம் ஆண்டு துரதிஸ்டவசமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்துட்டுது:(. அதுக்கு பிறகு சுமார் 13 வருடங்களாக சந்தர்ப்பம் சூழ்நிலையால் யாழ்பாணம் பக்கம் போக முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும் போது கவலையாத்தான் இருக்கு. எனியும் போக முடியுமோ என்பது சந்தேகமே. யாழ்ப்பாணத்தில் என்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்களை அசைபோடும் போது ஏற்படும் சுகமே அலாதி தான். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம் என்ற நோக்கமே இந்த இடுகை
மு.கு:- இதில் நான் குறிப்பிடப்போகும் அனைத்தும் 1995 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் என்னுடைய பார்வையில். அதற்க்கு பின்னர் யாழ்ப்பாணம் என்ன நிறத்தில் இருக்கு என்று எனக்கு தெரியாது. மற்றும் சிலருக்கு இந்த இடுகை சுவாரசியம் குறைந்ததாக இருக்கும். காரணம் பல வட்டார வழக்கங்களை நான் பாவிக்க முற்படுகிறேன். அது உங்களுக்கு விளங்காமல் இருந்தால் தயவு செய்து மன்னிச்சு கொள்ளுங்கோ.
1995 இல் யாழ்ப்பாணம் என்னுடைய பார்வையில்.................
அது என்னுடைய சிறுபராயமாக இருந்தாலும் நிகழ்ச்சிகள் எல்லாம் பசுமரத்து ஆணிபோல மனசுல பதிந்துள்ளது. எங்கட lane இரண்டு கோயில்களுக்கு மத்தியில் இருக்கு. So நான் கோயில் வீதிகளில் தான் என்னுடைய பெரும்பாலான பொழுதை களித்தேன். ஒரு அரைகால்சட்டை மேலே கஞ்சி போட்டு துவைத்த shirt போட்டுக்கொண்டு பொடியலோட பிள்ளையார் கோயில் வீதியில் விண் கட்டிய 8 மூலை பட்டம் விட்டது galle face beach இல் யாரோ பட்டம் விடுவதை பார்த்து ரசிப்பத்ற்க்கு இணையாகுமா???? நல்லூர் கந்தன் கோயில் வருடாந்த உற்சவத்துக்கு போய் கந்தனைத்தரிசிக்காமல் லிங்கம் cool bar ல ice cream குடிக்கிறது queens cafe ல submarine சாப்பிட்டுட்டு உப்புக்கு சப்பையா எதோ ice cream குடிக்கனும் என்று குடிக்கிறதுக்கு ஈடு இணையாகுமா?????
அந்தநேரத்தில் தான் காதலன் படம் release. so பிரபுதேவா தான் அண்ணாமர்களின் role model.பெரிய பெரிய துளைகள் போட்ட உள்பனியன் வெளியில்தெரியத்தக்க கண்ணறயான மார்டின் shirt, பின் pocket ல கிளியின் உருவம் அல்லது இதயத்துக்குள்ளால அம்பு பாயும் உருவம் போட்ட baggy jeans,சோலாபுரி செருப்பு இவைதான் பெரும்பாலான இளைஞர்களின் costume ஆக இருந்துச்சு(நாங்களும் பெரிய ஆள வந்த பேந்து இப்படி எல்லாம் வெளிக்கிடனும் என்டு கனவுவெல்லாம் கண்டது வேறகதை:)). அண்ணாமார் சைக்கிள்ல doubles போடுற அழகே தனிதான்.doubles என்டா என்ன என்டு நீங்க கேக்குறது விளங்குது. doubles போடுறது என்றால் சைக்கிள்ல இருவர் போகும் போது முன்னால் இருப்பவர் சைக்கிள் ஒடுபவருக்கு உறுதுனையாக சைக்கிளின் இடப்பக்க பெடலை இருவரும் சேர்ந்து மிதிப்பது.அப்படி மிதிக்கும் போது செருப்பின் அரைவாசிக்கும் மேல் காலுக்கு வெளியே இருக்கும் வண்ணம் மிதிக்கும் அழகே அழகுதான்:)
புதுவருடப்பிறப்புக்கு சீன வெடி எல்லாம் அப்ப கிடையாது. நம்மட ஆக்கள் தானே புத்திசாலிகளுக்கு பிறந்த அதி புத்திசாலிகள்.so நம்மட ஆக்கள் கண்டு பிடிச்ச ஒரு வெடி இருந்துச்சு. சைக்கிள் ரிங் கம்பியின் நுனியில் உள்ள துவாரத்துக்குள் தீக்குச்சி மருந்தை உட்செலுத்தி தரையில் பலமாக அடிக்க பெருசா வெடிக்கும். அந்த நேரத்தில் அது தான் எங்கட சீன வெடி.
இப்படி கனக்க விசயங்கள் கிடக்கு பாருங்கோ. tution center ல அண்ணாமார் அடிக்கிற லூட்டிய பற்றி எல்லாம் பேந்து ஒரு நாளைக்கு சாகவாசமா சொல்லுறன். project வேலையா கொஞ்சம் busya இருக்கிறன்.இப்ப போய்ட்டு வராட்டா...........
அடுத்த பதிவில சந்திப்போம்........
நீங்கள் தமிழ்மணத்துக்கு ஆதரவா? எதிரா?
கீழே இருக்கிற படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ. எந்தெந்தப் பதிவர்கள் தமிழ்மணத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கிறார்கள் என ஊகிக்கமுடியும். பதிவுகளின் தலைப்பையும் உள்ளடக்கங்களையும் வடிவா வாசியுங்கோ.
பி.கு: இத்தால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனின் இதுவொன்றும் மொக்கையேயன்றி வேறொன்றிலாத செயல்.
தசாவதார வாரம் போல இந்தவாரம் தமிழ்மண வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிப்பதாக இவ்வார பதிவுகளின் வாயிலாக அப்பதிவுகளுக்கான பின்னூட்டங்களின் சாரமாக அறிந்துகொண்டேன்.
இவ்வாரத்திற்கான அடியேனின் சிறு பங்களிப்பே இது.
- மதுவதனன் மௌ. -
Wednesday, July 16, 2008
"சீரியல்" அலை
மதி தோன்றும் மலை உச்சி!!
மதி மயங்கி மேகங்கள் உரச
மதி தயங்கி.. விதி குழம்பி
அவள் மட்டும் தனியே
நின்றாள்..
மான்விழி ஓரத்தில்
நீர்த்துளி புரள..
மனத்திரை முழுதும்
போராட்டம் உருள..
எங்கும் மயான அமைதி
சட்டென்று அவள் நகர
பட்டென்று "தொடரும்.." தோன்ற
பதறினர்..
எம் தொடர் ரசிகர்கள்..
எம் தொலைகாட்சி கைதிகள்..
கருகியது காலம்
கத்தரி குழம்போடு சேர்த்து..
அருமையான நேரம்
வெறுமையாக ஓடுகிறது..
சிந்தனை அலையை தவிர்த்து
"சீரியல்" அலையில் மூழ்கின்றனர்..
தொடரின்
சதி கற்பனையால்..
தெளிந்த குட்டையும்
சகதியாகிறது..
என்செய்வது..
நம்மவருக்கு கிடைத்த ஒரே அமைதியும்
இதுவல்லோ!!!