Friday, January 23, 2009

நாயின் பதிலடி

நான் ஒரு பிச்சைக்காரனை போல கந்தை உடுத்து குறுகிய ஒழுங்கை வழியாக நடந்துசெல்ல கனவு கண்டேன்
நாய் ஒன்று எனக்குப்பின்னால் நின்று குலைக்கத்தொடங்கியது. நான் வெறுப்புடன் திரும்பிப் பார்த்து “ஏய் எச்சில் நக்கும் ஜென்மமே வாயை மூடு” என்று கத்தினேன். அது தனக்குள்ளேயே சிரித்தது.
ஓ இல்லை இந்த விசயத்தில் நான் மனிதனை போல் இல்லையே.
“என்ன!” கோபம் பொங்க அதனை இழைக்கப்பட்ட பெரிய அவமதிப்பாக கருதினேன்.
“எனக்கு கூற வெட்கமாக இருக்கிறது செப்பிற்கும் வெள்ளிக்கும் பேதம் காணவோ, பட்டுக்கும் பருத்திக்கும் இடையே வேற்றுமை காணவோ, அதிகாரவர்க்கத்தையும் பாமர மக்களையும் வித்தியாசம் காணவோ எசமானர்களையும் அடிமைகளையும் வேறுபடுத்திக்காணவோ எனக்கு தெரியவில்லையே….”
நான் திரும்பி ஓட்டம் பிடித்தேன்.
கொஞ்சம் பொறு நாமிருவரும் இன்னும் கொஞ்சம் பேசுவோமே என்று உரத்த குரலில் என்னை நிற்கும்படி கூறியது.
ஆனால் எவ்வளவு வேகமாக ஒடமுடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி எனது கனவிலிருந்து வெளிவந்து எனது கட்டிலில் சாய்ந்தேன்.
தமிழாக்கம் நடனசபாபதி, லூ ஷுன் போர்க்காலச்சிந்தனைகள், தேசிய கலை இலக்கியப்பேரவை

1 பின்னூட்டங்கள்:

Arulkaran said...

ஓ... அவங்களா நீங்கள்... நல்லா இருக்கு...

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி