Wednesday, February 27, 2008

உள்ளொன்று வைத்துப் புறமொன்று...

பழமொழி: "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

வெளிப்படை விளக்கம் : உணவு சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு உடனடியாக செல்; சண்டை சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு போவதை குறை.

உண்மை விளக்கம் : எப்பொழுதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கு.

உண்மை விளக்க விளக்கம் : எமது பண்டைய வரலாறுகளில் ஒரு பந்திக்கு முதலில் அழைப்பது கல்வி கலைகளில் சிறந்து விளங்கிய ஒருவரையே அத்துடன் ஒரு படைக்கு பின்னால் தலைவனாக நின்று அதை வழிநடத்தி செல்வதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கும் ஒருவரே.

Monday, February 25, 2008

அவள் ஒரு கொலையாளி....

ஆயுதம் இல்லாமல் என்னை கொல்கின்றாள்
என்னைப்பார்த்து சிரிக்கும் போது

Wednesday, February 20, 2008

அவளுக்காக.....

கவிதை எழுத தெரியுமா எனக்கேட்டாள்
எழுத தெரியும் என்று பொய் சொன்னேன்
அவள் பெயரை எழுதி கவிதை என்றேன்
பல சினிமாவில் பார்த்துவிட்டேன் என்றாள்
பின்னால் என் பெயரையும் சேர்த்துக்கொண்டேன்
அருமையான ஹைகூ என்றாள்
அன்று தான் தெரியும் ஹைகூ இரண்டு வரி என்று

Wednesday, February 13, 2008

நாளை காதலர் தினம்!!!


நண்பன்: காதலைப் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: அனுபவம் போதாதடா. இதுவரை நான் காதலித்தது இருபது பெண்களைத்தானடா.

நண்பன்: காதலர் தினம் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: வழமையான வருடங்களில் நாற்பத்தாறு நாட்கழித்தும்; நான்கு வருடங்களுக்கொருமுறை நாற்பத்தேழு நாட்கழித்தும் வந்திருக்க வேண்டியது...

எல்லாப் பூக்களுக்காக...ஒரு பூங்கா

நான் ஒரு பராமரிப்பாளன். தமிழ்ப்பூங்கா உரிமையாளரால், பறந்து வரும் வண்டுகள் இளைப்பாறித் தேனுண்டு களிக்க ஓரிரண்டு பூச்செடிகள் நட்டு பூவரும்வரை அதைப் பராமரிக்க அழைக்கப்பட்ட ஒருவன்.

என்போல் சிலபல பராமரிப்பாளர்கள் இப்பூங்காவில...ஆனால் ஏன் எல்லோரும் ஒரே பூச்செடியை நட்டு ஒரே பூக்களையே தரவேண்டும்? வரும் வண்டுகள் சலிப்படையுமல்லவா...சலிப்படையும் வண்டுகள் மீளவர மறுக்குமல்லவா...

வண்டுகள் வகை பல. நான் இந்தப் பூவில் மட்டும்தான் தேனுண்பேன் என்றியம்பும் வகை சில; எல்லாப் பூக்களிலும் நானமர்வேன் என்றியம்பும் வகை சில.

நான் இனி நடப்போகும் செடிகள் ஒருவகைக்குள் மட்டும் ஒதுங்கிக் கிடக்காது. ஒற்றைச் செடியிலும் இனி வண்டுகள் வந்தமர வகைவகையாயப் பூவிருக்கும். உரிமையாளரைக் கேட்காது உரத்தைப் போடப்போகிறேன்; உங்களது தயவோடு செடியை ஊன்றப்போகிறேன்.

Sunday, February 10, 2008

சுதந்திர தினம்

சில வீதிகள் போக்குவரவுக்குத் தடை
பல இடங்களில் வழமைக்கதிகமான சோதனைகள்
வெளியே போனால் திரும்புவோமா மீண்டும்....?
வேறென்ன இன்று "சுதந்திர தினம்"

Thursday, January 3, 2008

காதலை பற்றி ...........

காதல் ஒரு கத்தரிக்காய்
அழுகினால் உதவாது

காதல் ஒரு வெங்காயம்
க்டைசியில் கண்ணீர் தான் மிச்சம்

காதல் ஒரு பாவற்காய்
பார்க்க பசுமை ருசிக்க கொடுமை

காதல் ஒரு பூசனிக்காய்
கல்யாணத்துக்கு முன் திருஷ்டி